states

img

உத்தரபிரதேசத்தில் 2 பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் பர்வஞ்சல் நெடுஞ்சாலையில் நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே திங்களன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. பிகாரில் இருந்து தில்லி சென்று கொண்டிருந்த பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 16 பேர் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பாரபங்கி எஸ்.பி. அனுராக் வத்ஸ் தெரிவித்தார்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

;